Thursday, March 26, 2009

Energy saving

Improved water services save more than $800,000 annually.


Tamil Nadu Avoids Blackouts via Energy Savings

Tamil Nadu is investing in energy efficiency in the state’s water services and street lighting in 29 of its 45 city authorities. Power bills typically represent 40-60% of the total costs of running urban water plants. In response to this, the Tamil Nadu Urban Development Fund (TNUDF) which invests in infrastructure projects, the Renewable Energy and Energy Efficiency Partnership (REEEP) and the Alliance to Save Energy (the Alliance) are promoting the concept of Energy Service Companies (ESCOs).


The underlying idea is simple: ESCOs finance the installation of new motors, pumps and pipelines for municipalities, replacing antiquated, energy-consuming machinery. The ESCO guarantees that the municipalities will have 30% reductions in their energy bills. Three ESCOs selected through a tender process will run the project on the condition that efficiency targets are met and maintained. Local administrators are receiving training on the new, intricate financial arrangements called performance-based contracts.




“One of the main challenges of the project has been the adoption of a new procurement process in the form of energy performance based contracts for both street lighting and water pumping. In this type of contract, the services and energy efficiency equipments costs are bundled into the project's cost and are repaid through the generated savings in Rupees,” says Sudha Setty, South Asia Program Manager at the Alliance.

As India’s most urbanised state, Tamil Nadu’s electricity problems are well known. It is home to the largest number of businesses – from car manufacturing to textiles to electronics. With a population similar to France, Tamil Nadu produces only 9.5 gigawatts (GW) of power each year, compared to France’s 118 GW.

As the pilot phase develops, the financial and energy savings identified are substantial. According to Raj Kumar, Senior Manager at TNUDF, they will amount to approximately 40.9 million rupees per annum, or US $800,000 – including the parallel street light energy saving project. To this are added major savings in operational and maintenance costs. If that is reproduced through a rollout all over the state, as he and his colleagues hope, it will make a significant contribution to increased services.

The region’s electricity utility has been supportive of the project from day one as the state has a power crisis. Sudha Setty explains: “The electricity board is a part of the project committee and they are a willing part of this project. They can also use the freed up energy to supply to other needy customers or add new customers.”

The project and its scale-up are part of REEEP’s international mandate to replicate successful energy efficiency models. REEEP and the Alliance previously worked together on energy efficiency in the water sector in South Africa. REEEP also previously funded an ESCO street lighting project in Madhya Pradesh. “We are pleased to contribute to the transfer of successful energy saving models to cities in Tamil Nadu,” states Dr. Marianne Osterkorn, Director General of REEEP. “We look forward to the day when other Indian States can benefit from the learnings generated in this important project.”

For more information contact:
Sudha Setty
Senior Program Manager
Alliance to Save Energy
ssetty@ase.org
www.watergy.org

Saturday, March 21, 2009

யாவரும் நலம் - விமர்சனம்
தமிழில் அதிகமாக க்ரைம் த்‌ரில்லர் வருவதில்லை. அப்படியே வருகிற படங்களும் அரைத்த மாவையே அரைத்து தலைவலியை ஏற்படுத்துவதுதான் மிச்சம். ஆச்ச‌ரியமாக பழையன கழிந்து புத்துணர்ச்சியுடன் வந்திருக்கிறது யாவரும் நலம்.

மாதவன் தனது அம்மா, மனைவி, அண்ணன், அண்ணி, குழந்தைகள் சகிதமாக புதிதாக வாங்கிய பிளாட்டுக்கு குடி வருகிறார். பிளாட் பதிமூன்றாவது மாடியில் இருக்கிறது. வீட்டிற்கு வந்த நாள்முதல் சில அமானுஷ்ய விஷயங்கள் வீட்டில் நடப்பதை உணர்கிறார் மாதவன். பயம் ஒரு நிழல் போல் அவர் மீது படர்வதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் கே.குமார்.


WD

வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்த்த காற்றில் ஜன்னல்கள் அடித்துக் கொள்வது, வெள்ளை புடவை கட்டிய பெண், பாட்டுப் பாடுவது, நடு இரவில் கொலுசு சத்தம் கேட்பது போன்ற புராதன விஷயங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

வீட்டிற்குள் செல்போனில் எடுக்கப்படும் தனது படம் தெ‌ளிவற்று இருப்பதை மாதவன் கண்டுபிடிக்கும் காட்சியில் மாதவனின் பயம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் யாவரும் நலம் என்ற தொட‌ரில் தனது வீட்டில் நடக்கும் சம்பவங்கள் முன்கூட்டியே காட்டப்படுவதை மாதவன் கண்டுபிடிக்கிறார். இந்தத் தொடர் அவர்கள் வீட்டில் மட்டுமே ஒளிபரப்பாகிறது. (யாவரும் நலம் தொடரைப் தொடர்ந்து பார்க்கும் மாதவனின் அம்மா, மனைவி மற்றும் அண்ணிக்கு இந்த உண்மைகள் தெ‌ரியாமல் இருப்பது எப்படி?).

அந்தத் தொட‌ரில்வரும் நடிகர்கள் முப்பது வருடங்களுக்குமுன் மாதவனின் பிளாட் இருக்கும் இடத்தில் வசித்தவர்கள். அவர்கள் வீட்டின் நம்பரான 13பி தான் மாதவன் வீட்டு நம்பரும். இந்த உண்மைகளுடன் அவர்கள் கொலை செய்யப்பட்ட விவரமும் தெ‌ரிய வருகிறது. அமானுஷ்ய கதை மெல்ல க்ரைம் கதைக்குள் நுழைகிறது.

அவர்கள் யாரால் ஏன் கொல்லப்பட்டார்கள்? இந்த கேள்விக்கான பதில் தெ‌ரியவரும்போது மாதவனின் பிரச்சனைகளுக்கும் முடிவு கிடைக்கிறது.

இறந்தவர்களின் ஆவி உயிருடன் இருப்பவர்களின் உடலில் புகுந்து தன்னை கொன்றவர்களை பழி வாங்கும் கதைகளை பார்த்திருக்கிறேhம். 21 ஆம் நூற்றாண்டில் மனிதனுக்குப் பதில் தொலை ஊடகங்களில் ஆவி புகுந்தால்... ? விக்ரம் கே. குமார் வித்தியாசமாக சிந்தித்ததன் பலன் நமக்கு நல்ல த்‌ரில்லர் ஒன்று கிடைத்திருக்கிறது.

படத்தின் நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். த்‌ரில்லருக்கேயு‌ரிய க்ரே நிற டோனை பயன்படுத்தியிருப்பது படத்தின் ‌ரிச்னெஸ்சை கூட்டுகிறது. உறுத்தாத வித்தியாசமான கோணங்கள். இசையைவிட பி.சி.யின் ஒளியும், இருளும் நம்மை அதிகமாக பயமுறுத்துகிறது. மாதவன் அதிர்ச்சியடையும்போது கேமாரா அளவுக்கதிகமாக நடுங்குகிறது. அதேபோல் டாக்டரை காண்பிக்கும் சில காட்சிகளில் ஊஞ்சல்போல் ஒரு தினுசாக ஆடுகிறது. இரண்டுமே கதைக்கு வெளியே நம்மை இழுத்து விடுகின்றன.


மாதவன் மீண்டுமொருமுறை தனது திறமையை நிரூபித்திருக்கிறார். பயம், தவிப்பு இரண்டையும் அவரது கண்களே வெளிப்படுத்துகின்றன. சமையல் புத்தகம் என்று சொல்லி மனைவிக்கு காமசூத்ரா புத்தகம் ப‌ரிசளிப்பதும், போகத்துக்கு தந்தூரி சிக்கன், சிக்கன் 69 என பெய‌ரி‌ட்டு அழைப்பதும்... ‌ஜில்.

மாதவனின் மனைவியாக வரும் நீது சந்திராவுக்கு அதிக வேலையில்லை. (குளோசப் காட்சியில் அவரது உதட்டசைவுக்கும் டப்பிங்குக்கும் சம்பந்தமே இல்லை. கவனித்திருக்கலாம்). மாதவனின் அம்மாவாக சரண்யா. அவரை அழ வைக்காமல் குதூகலமாக காட்டியதற்கே இயக்குனரை பாராட்டலாம். மாதவனின் நண்பராக வரும் போலீஸ் அதிகா‌ரி, மனநலம் தவறியவர், வக்கீலாக வரும் சம்பத், டாக்டராக வருகிறவர் என அனைவரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

பதிமூன்றுக்கு மேல் மாடிகள் இருக்கும் அபார்ட்மெண்டில் நாயுடன் தி‌ரியும் கண் தெ‌ரியாத பெ‌ரியவர், வாட்ச்மேன் தவிர்த்து வேறு யாருமேயில்லையா? இத்தனைக்கும் அந்த அபார்ட்மெண்டும், லிப்டும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது.

தனது வீட்டில் நடக்கப் போகும் சம்பவங்களை தொலைக்காட்சி தொடர்மூலம் தெ‌ரிந்து கொள்கிறார் மாதவன். கிளைமாக்ஸில் கனவு மூலமாகவும் சில விஷயங்கள் அவருக்கு தெ‌ரிய வருகிறது. இது தேவையில்லாத குழப்பத்தை திரைக்கதையில் ஏற்படுத்துகிறது.

தனது வீட்டிலுள்ளவர்களை விமானத்தில் எங்காவது அனுப்பி வைக்கும்படி மாதவன் கேட்பதும், அவரது போலீஸ் நண்பரும், டாக்டரும் அதற்கு உடனடியாக ஒத்துக் கொள்வதும் நம்பும்படி இல்லை. கொலைகாரன் யார் என்பதை மாதவன் தெ‌ரிந்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே பார்வையாளர்களால் யூகித்துக் கொள்ள முடிகிறது.

வழக்கமான த்‌ரில்ல‌ரிலிருந்து எல்லா வகையிலும் மாறுபட்டிருக்கும் இந்தப் படத்தின் பின்னணி இசையில் மட்டும் மாற்றமில்லை. அதே வழமையான இரைச்சல்.. பே‌ரிரைச்சல். இரண்டே பாடல்கள் என்பது பெ‌ரிய ஆறுதல். (அந்த இரண்டையும்கூட தவிர்த்திருக்கலாம்). இயல்பான வசனங்களும், ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள்.

ஆவிகள் ஸ்கி‌ரின் ப்ளே எழுதி சீ‌ரியல் ஒளிபரப்புமா என்பதான சின்னச் சின்ன லா‌‌ஜிக் நெருடல்கள் இருந்தாலும் தமிழ் த்‌ரில்லர்களுக்கு முதல்முதலாக ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது யாவரும் நலம். கை குலுக்கி வரவேற்கலாம்.

Monday, March 9, 2009

LPG gas cylinder's

<Have U ever heard about LPG gas cylinder's expiry date....!!

I also didn't know how to find LPG cylinder's expiry date? Expired Cylinders are not safe for use and may cause accidents. In this regard please be cautious at the time of accepting any LPG cylinder from the Vendor.

Here is how we can check the expiry of LPG cylinders:
On one of three side stems of the cylinder, the expiry date is coded alpha numerically as follows A or B or C or D and some two digit number following this e.g. D06.

The alphabets stand for quarters -
1. A for March (First Qtr),
2. B for June (Second Qtr),
3. C for Sept (Third Qtr),
4. D for December (Fourth Qtr).


The digits stand for the year till it is valid. Hence D06 would mean December qtr of 2006.
Please Return Back the Cylinder that you get with a Expiry Date, they are prone to Leak and other Hazardous accidents...

The second example with D13 allows the cylinder to be in use until Dec 2013

Kindly pass this to every one,
and create awareness among the public

Thursday, March 5, 2009

காதல் ஆத்திசூடி

காதல் ஆத்திசூடி


அவளிடம் மதி மயங்கு!

உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்... சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.

அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!
உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும்.
மீண்டும் தொலைப்பதற்காக!

ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!

அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும்.
அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு. குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டுத் திரும்பும் நள்ளிரவிலும் அவள் கண்ணில் படு. எங்கெங்கும் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்.
இவன் ஒருத்தனா... இல்லை ஏழு பேரா என அவள் குழம்ப வேண்டும்.
குட்டையைக் குழப்பி மீன் பிடிப் பதைப் போல, அவள் மனதைக் குழப்பி மனதைப் பிடிக்கும் வித்தை இது!

இதயத்தை அலங்கரி!

ஒருத்தி நுழையப் போகிறாள் என்பது தெரிந்த நொடியிலேயே, உள்ளங்கை அளவிலிருந்து உலக அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடும் இதயம்! ஆகவே இதயத்தை அலங்கரி.
இனி அவளுக்கும் உனக்கும் ஏற்படப் போகும் நிகழ்வுகளின் ஆல்பங்களை அடுக்கிவைக்க, அதன் சுவர் முழுவதும் அலமாரிகளை அடி.
அவளை வரவேற்க வளைவுகளும், விளையாட ஊஞ்சலும், நீராடத் தடாகமும், துயில்வதற்கு மெத்தையும், முக்கியமாய் அவள் தன்னை அடிக்கடி அழகு பார்த்துக்கொள்ள அவளுயரக் கண்ணாடியும் அமை. அவள் கேட்க, துடிப்புகளில் இனிய இசையை உண்டாக்கு. சீக்கிரம்... அதோ அவள் வந்துகொண்டு இருக்கிறாள்!

ஈர்க்கும் படி நட!

இது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், அவளை ஈர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம்...
ஏன் என்றால், அவ்வளவு கஷ்டத் துக்கும் பரிசாகக் கிடைக்கப்போவது அவளின் அழகான இதயம்.
முதன்முதலாய் உன் கண்களை அவள் கண்கள் சந்திக்கிறபோதுதான் உன் காதல் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப் படுகிறது.
கண்ணியம் என்பது அரசியலில் இருக்கிறதோ இல்லையோ, அவளை ஈர்க்கும் உன் முயற்சியில் அது இருந்தால், வெகு சீக்கிரமே அவள் மனதில் பட்டொளி வீசிப் பறக்கும் உன் கொடி!

உறுத்தாமல் பார்!

காதலிப்பதால் கிடைக்கும் சுகத்தில் பாதி சுகம் பார்த்துக் கொண்டு இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
பார்வைகள் ஒருபோதும் பார்ப்பதால் தீர்வதில்லை. மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது..
உன் பார்வை அவள் அழகைத் தின்னக் கூடியதாக இருக்கக் கூடாது. அவள் அழகுக்கு மகுடம் சூட்டுவதாக இருக்க வேண்டும். உன் பார்வையால் தனது அழகு வளர்வதாக அவள் உணர வேண்டும்.
இப்படி எல்லாம் எப்படிப் பார்ப்பதென்று நீ எங்கேயும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை.
மனதில் காதலை மட்டும் வைத்து, ஒரு மலரைப் பார்ப்பதைப் போல் அவளைப்பார்.
உனது கண்களால் உன் உள்ளத்தில் உள்ள காதலுக்கு ஓராயிரம் ஊற்றுக்கண்கள் திறக்கும்!

ஊதியமின்றிக் காவல் செய்!

உலகத்திலேயே அழகான வேலை, உன் காதலியைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி வேலைதான்.
நீ அவளைப் பின்தொடர்வதை அவள் தெரிந்துகொண்டால், எங்குவேண்டு மானாலும் துணிச்சலுடன் போவாள்.
அவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ 'எங்க போற' என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய். அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.
என்றாவது ஒரு நாள். குரைக்கும் நாய்க்குப் பயந்தோ, பாய்ந்து வரும் மாட்டைக் கண்டோ அத்தனை பேரையும் விட்டுவிட்டு உன் பின்னால் ஓடி வந்து ஒளிவாள். அதுதான் உன் காவலுக்கும் காதலுக்கும் அவள் தரும் மரியாதை!

எதற்கும் வழியாதே!

தவறுதலாய் அவள் கைக்குட்டை கீழே விழுவதைப் பார்த்துவிட்டால் ஓடிப்போய் சிதறு தேங்காய்ப் பொறுக்கு பவனைப் போல் பொறுக்காதே.
செடிக்கு அடியில் கிடக்கும் மலரைப் போல் நிதானமாய் எடு. அதை அவளிடம் தருகையில் 'உங்க கர்ச்சீப். மிஸ் பண்ணிட்டீங்க' என்று வழியாதே. ''இது உன் கர்ச்சீப்பா' என்று பந்தாவாகக் கேள்.
இன்னொரு தெய்வாதீனத் தருணத்தில் நீயும் அவளும் அருகருகே நிற்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலாம்.
அப்படி அவள் அருகில் நிற்கையில் உனக்குக் கைகால்கள் உதறலாம். அல்லது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏகாந்தமாய் நமட்டுச்சிரிப்பு சிரிக்கத் தோன்றலாம்.
இதில் நீ எதைச் செய்தாலும், உனக்கு அவள் போட்டுவைத்திருக்கும் மதிப்பெண் அம்பேல் ஆகிவிடும்.
ஒன்றும் தெரியாத பையனைப் போல அமைதியாய் நில்.
அமைதி ஓர் அற்புதமான வசிய மருந்து!

ஏகலைவனாய் இரு!

நீ எத்தனையோ காதல் காவியங் களைப் பார்த்திருக்கலாம். எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கலாம்.. ஆனால், அவை எதிலிருந்தும் உனக்கான காதலை நீ எடுத்திருக்க முடியாது.
அது அவளிடம் மட்டுமே கொடுத்தனுப்பப்பட்டு இருக்கிறது...
அதை, அவளை நீ பார்த்த நொடியி லேயே உன்னிடம் சேர்த்துவிட்டாள்.ஆகையால், காதலில் அவளே உனக்கு குரு.
அதற்கான குருதட்சணையாக, அவள் உன் உயிரைக் கேட்டாலும், ஏகலைவன் போல் யோசிக்காமல் கொய்து தரத் தயராய் இருக்க வேண்டும் நீ.
ஆனால், அப்படிக் கேட்க அவள் ஒன்றும் துரோணர் இல்லை. என்றாலும் அவள் எப்போது எது கேட்டாலும் தருவதற்குத் தயராய் நீ ஏகலைவனாகவே இரு!

ஐம்புலனிலும் அவளை வை!

கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள்.
உன் காதலியும் இப்படித்தான் உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள்.
ஆனால், அதற்கு முன்... உன் ஐம்புல னாலும் அவளை நீ காதலி.
கண்களில் அவள் உருவத்தை வை
காதுகளில் அவள் குரலை வை
சுவாசத்தில் அவள் வாசம் வை
உதடுகளில் அவள் பெயரை வை
உணர்வில் அவள் உயிரை வை!

ஒரு நாள் காதலைச் சொல்!

அவள் மகிழ்வாய் இருக்கும் நேரம் பார்த்து, ''நான் ரொம்ப நாளாய் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவள் நீயா?' என்று கேள்.
புன்னகையை அடக்கிக்கொண்டு 'ஏன்... அவள் யாரென்று உனக்குத் தெரியாதா?' என்பாள்.
'அவளை நினைக்க ஆரம்பித்த பிறகு என்னையே நான் மறந்துவிட்ட தால், அவள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது' என்று சொல்.
'உன்னை ஞாபகப்படுத்திக்கொள்... அவள் யாரென்பது தெரிந்துவிடும்' என்பாள்.
'அவளை நான் மறந்தால்தானே என் ஞாபகம் எனக்கு வரும்' என்று கேள்.
'அவளை மறந்துவிட வேண்டியது தானே' என்பாள்.
'என் ஆயுள் காலம் வரை அவளை ஞாபகம் வைத்திருப்பேன்' என்பது நிஜமில்லைதான்.
ஆனால், அவளை நான் ஞாபகம் வைத்திருக்கும்வரைதான்...
'நான் உயிரோடு இருப்பேன் என்பது மட்டும் கண்டிப்பாய் நிஜம்' என்று சொல்.
'அப்படியானால் நீ காதலிக்கும் பெண் நான்தான்' என்பாள் தலையைக் குனிந்து.
'எனக்குத் தெரியும்' என்று சொல்.
செல்லமாய் கோபிப்பாள். பிறகு கண்டிப்பாய் கிடைக்கும் அழகான பிகு முத்தம்!

ஓர் உலகம் செய்!

அந்த உலகம் அற்புதமானது.
அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்... கதகதப்பாய் மழை பெய்யும்.
அந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே.
நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.
ஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம்.
அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள்.
அதற்கின்னும் காலமும் கனிய வில்லை. ஆப்பிளும் கனியவில்லை!

ஒளவியும் ஒளவாமலும் பழகு!

இது என்ன வார்த்தை என்று முழிக்காதே.
தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.
தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது.
அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல.
மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்... நீ பூமியாய்!
காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது.
ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.
தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்